Congress leader K C Venugopal said the six years of the Modi dispensation have seen fraying of bonds of empathy, fraternity and brotherhood with increase in acts of communal and sectarian violence.
The Congress on Friday described the first year of the Modi government as a "year of disappointment, disastrous management and diabolical pain".
Congress leader K C Venugopal said the six years of the Modi dispensation have seen fraying of bonds of empathy, fraternity and brotherhood with increase in acts of communal and sectarian violence.
Congress chief spokesperson Randeep Surjewala said that at the end of six years, it appears the Modi government is at war with its people and is inflicting wounds on them, instead of healing them. "It is inflicting wounds on Mother India," he said.
"This government is trying to fill coffers of the select rich and is inflicting pain on the poor," Surjewala said.
On the BJP's charge of the Congress playing politics over the Covid-19 crisis, Venugopal said the opposition party did not indulge in any politics and gave suggestions instead.
"Being a responsible opposition, it is our duty to raise the problems faced by the common people. As opposition, we highlighted the failures of the government," he said.
Venugopal said the government "is totally insensitive" to the plight of migrant labourers and farmers.
Surjewala also demanded that a virtual session of Parliament be convened immediately to discuss pressing issues and the due process be set in motion for holding of meetings of various parliamentary committees.
Modi and his cabinet had taken oath on this day last year for a second term in office.
Taking note of the congregation of migrant workers at railway stations and bus stands in Maharashtra as they wait for their return to the home states, the Bombay High Court has sought a report from the Maharashtra government on how it was addressing the issue.
A division bench of Chief Justice Dipankar Datta and Justice K K Tated was on Friday hearing a petition filed by the Centre of Indian Trade Unions, raising concerns over the plight of migrant workers amid the Covid-19 pandemic.
According to the petitioner, the migrant workers who have submitted applications for leaving Maharashtra availin the Shramik special trains and buses, have been left in the dark about the status of their applications.
The plea said that till the time they are to board the train or bus for their native place, they are made to stay in cramped and unhygienic shelters without being provided with food and other essentials.
Additional solicitor general Anil Singh on Friday told the court that the Supreme Court is already seized of a matter pertaining to all issues faced by the migrant workers.
The court took note of this, but said it would still require the state government to file a report by June 2. "With regard to the peculiar local conditions, we consider it fit and proper to call upon the state to file a report indicating how the plight of the migrant workers, who have been assembling at the railways stations, bus stands in Mumbai and places around it are being addressed," the court said.
The bench noted that it has come across photographs in newspapers showing congregation of migrant workers not only at railway stations, but also on the nearby streets. "Such congregation, if allowed, would run counter to the objective, for which the lockdown has been imposed," the court said.
"The report shall indicate the whole procedure that a migrant worker is required to follow in order to be eligible for leaving this state, the likely time within which he could board a bus or train, the nature of shelter he is provided with during the waiting period as well as provisions made available to him for his sustenance," the court said.
![]() |
![]() |
60 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று ( மே 25) மீண்டும் துவங்கியது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இன்று துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, லக்னோ, டில்லி , கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை துவங்கியது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்தனர். மாஸ்க் அணிந்திருந்த அவர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள், விமான நிலையம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரும்பாலான பயணிகள் முகத்தை முழுவதும் மூடும் வகையிலான பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்திருந்தனர்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி கிளம்பி சென்றது. 260 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 111 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
வங்கக்கடலில் உருவான உம்பன் சூப்பர் புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தாவிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் இன்று பிற்பகலில் காற்று வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.
இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருந்தது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு – தென்கிழக்கில் இருந்தது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது.
மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.
காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசா மாநிலத்தில் 1.5 லட்சம் பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்ப்டடுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கியுள்ளனர்.
புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகின்றன. பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் இரவு முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி
ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
விரிவான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை செய்ததின் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள்.இந்த 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன. 5 அம்ச திட்டங்களுடன் 20 லட்சம் கோடியிலான தன்னிறைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் மூலம், இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகத்திற்கு உதவுவதாக இருக்கும்.
அதிகளவில் உள்ளூர் பொருட்கள் உற்பத்தி செய்வதே தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கமாக இருக்கும். உள்ளூர் பொரு்ட்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க தன்னிறைவு இந்தியா திட்டம் உதவும். பிபிஇ கிட்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. தன்னிறைவை எட்டியுள்ளது.
உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாக தெரிவித்துள்ளார். தொழில்கள் நடத்துவது எளிதாக்கப்படும். உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம். அதிகளவில் உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்வதே தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கம்.
இந்திய வர்த்தக பொருட்கள் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படும். ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு உதவியுள்ளன. ஊரடங்கால், ஏழைகள், வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.
மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.பிரதான் மந்திரி கிசான் திட்டம் நேரடியாக ஏழைகளுக்கு பண உதவி செலுத்தப்பட்டது. ஊரடங்ககு காலத்தில் மிகவும் உதவியது. நேரடி மானிய திட்டம் மக்களுக்கு உதவியாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்று கொள்கிறோம். இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கத்திலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்சா்ரபு இந்தியா என்றால், உலகத்திடம் இருந்து துண்டித்து கொள்வதல்ல. தன்னம்பிக்கையை அதிகரிப்பது. 41 கோடி பயனாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டன. நேரடியாக பண உதவி அளிக்கப்பட்டது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்தது. 6.5 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 71 ஆயிரம் டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம். இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சிறுகுறு நிறுவனங்களுக்கு இன்று 6 சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. சிறுகுறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இந்த திட்டம் அக்., 31 வரை செயல்படுத்தப்படும். 45 லட்சம் சிறுகுறு தொழிற்சாலைகள் பயனடையும்
4 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முதல் ஒராண்டு காலம் கடன் தவணை வசூலிக்கப்படாது. புதிய கடன் பெற சொத்து பத்திரம் எதுவும் செலுத்த தேவையில்லை. நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி. வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் பெற அரசு உதவி செய்யும். உத்தரவாதம் அளிப்பதற்காக தனியாக ஒரு நிதி ஒதுக்கப்படும்.
குறுந்தொழில் முதலீட்டு வரம்பு ரூ.25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது. நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடி ஆகவும், சிறு தொழில் முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாகவும் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
கொரோனாவால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க உள்ளது மோடி தலைமையிலான அரசு.
இந்த முக்கியமான அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மோடி வீடியோ வாயிலாகப் பேசும் போது பிரதமர் அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில், சமீப காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியத் துறைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் இத்திட்டம் Aatmanirbhar Bharat என்ற பெயரில் இயங்க உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் உடன் 4வது முறையாக மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் மே 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
ஆனால் மாதாந்திர கடன் தவணை தளர்வுக்கு, வட்டி இல்லை என்பது பற்றி பிரதமர் எதுவும் அறிவிக்கவில்லை.
மே 12ம் தேதி முதல் மெதுவாகக் குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் சிறப்பு ரயில்கள்; இது புதுடெல்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை செண்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்களாக இருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து பயணிகள் ரயிலும் மார்ச் 25ம் தேதி லாக் டவுன் காரணமாக இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்த 15 ரயில்கள் சேவை தொடங்கிய பிறகு புதிய தடங்களில் மேலும் சில சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது கோவிட்19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்காக 20,000 ரயில் பெட்டிகளை ஒதுக்கிய பிறகும், புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலங்கள் போய்ச் சேர தேவைப்படும் 300 ரயில்களுக்கான பெட்டிகள் போக மீதி ரயில் பெட்டிகள் இருப்பதை வைத்து புதிய தடங்களில் ரயில்கள் இயக்கப்படலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது
இந்த ரயில்களுக்கான ரிசர்வேஷன் டிக்கெட்டுகளுக்கான புக்கிங் மே 11 மாலை 4 மணி முதல் தொடங்குகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். ரயில் நிலையங்களில் டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படாது. பிளாட்பார்ம் டிக்கெட் கூட கொடுக்கப்பட மாட்டாது.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம், இவர்களுக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட்டும் உண்டு, நோய் அறிகுறிகள் இல்லாதவர்களே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் அமைந்து இருக்கும் எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையானது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இயங்கி உள்ளது. இந்நிலையில், அந்த ஆலையில் இருந்து அதிகாலையில் ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.
ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன வாயு சம்பவத்தில் 6 வயது சிறுமி உள்பட 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகாலை 2.30 முதல் 3 மணி அளவில் ரசாயன வாயு கசிவு சம்பவம் நிகழ்ந்ததால் வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் வாயுக் கசிவு நிகழ்ந்ததால் மக்கள் அதை அறியாமலேயே இருந்துள்ளனர்.
மீட்புக் குழுவினர், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியால் நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கோபாலப்பட்டினம் மற்றும் கிங் ஜார்ஜ் (KGH) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடபுரம் பகுதியைச் சுற்றியுள்ள 128-க்கும் மேற்பட்டோர் கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 98 பேர் மீண்டுள்ளதாகவும், 10 பேரு மூச்சுத்திணறல் பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
ஒன்று முதல் ஒன்றரை கி.மீ சுற்றளவிற்கு அதிக பாதிப்பு நிகழ்ந்து உள்ளதாகவும், சுமார் 3 கி.மீ தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது. கால்நடை விலங்குகள் கூட இருந்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் லாக்-டவுண் செய்யப்பட்டிருக்கும் காலகட்டத்தில் மதுபானக் கடைகளில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக சத்தீஸ்கர் அரசு மாநிலத்தின் பசுமை மண்டலங்களில் வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் மது விற்பனையை கட்டுப்படுத்தும் சி.எஸ்.எம்.சி.எல் (சத்தீஸ்கர் மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட்) என்பதன் பெயரால் இணையதள போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 23 முதல் மூடப்பட்ட மதுபானக் கடைகள், கோவிட் -19 கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் வணிக வளாகங்களைத் தவிர, திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. ஆனால், மாநில தலைநகர் ராய்ப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வெளியே ஏராளமான மக்கள் விதிமுறைகளை மீறி வரிசையில் நின்றனர்.
மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது, இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை குறைக்க முடியும். சி.எஸ்.எம்.சி.எல் வலைத்தளம் அல்லது பிளே ஸ்டோரில் கிடைக்கும் அதன் மொபைல் பயன்பாடு மூலம் மக்கள் நேரடியாக ஆர்டர்களை பதிவு செய்யலாம். இருப்பினும், பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்படாத ராய்ப்பூர் மற்றும் கோர்பா மாவட்டங்களில் வீட்டு விநியோக வசதி கிடைக்காது என அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது.
COVID-19 இடர் விவரக்குறிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது.
ஆர்டரை ஆன்லைனில் பெறுவதற்காக மக்கள் தங்கள் மொபைல் எண், ஆதார் எண் மற்றும் முகவரியை பதிவு செய்ய வேண்டும், இது OTP (ஒரு முறை கடவுச்சொல்) மூலம் உறுதிப்படுத்தப்படும். ஒரு வாடிக்கையாளர் வீட்டு விநியோகத்திற்காக ஒரு நேரத்தில் 5,000 மில்லி மதுபானம் வரை ஆர்டர் செய்யலாம். டெலிவரி கட்டணம் ரூ.120 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.
மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற பகுதிகளில் பாதிப்பு அவ்வப்போது பதிவாகி கொண்டிருக்கிறது. தமிழர்கள் அதிகமான பகுதிகளில் தாராவியும் ஒன்று. மேலும் தாராவியில் குடிசை பகுதி வாழ் மக்கள் தான் பெரும்பாலானவர்கள் வசிக்கின்றனர். குடிசை பகுதிகளில் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அங்கு ஹைட்ரோ குளோரோகுயினை கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, தொற்று அதிகரித்து பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. தாராவியில் கொரோனாவால் 330 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று (ஏப்.,29) புதிதாக தாராவியில் 14 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி
வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 90000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இதேபோல் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதே போல் பல தொழில் அதிபர்களும் பல கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளார்கள்.
இப்படி கடன் வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டு தப்பி ஓடிய பல தொழில் அதிபர்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விஜய் மல்லையா , நீரவ் மோடி, உள்பட பல தொழில் அதிபர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அவருக்கு பதில் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தையும் கூறியுள்ளது . மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட நபர் மற்றும் கடன் விவரம் வருமாறு:
மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி.
ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.
வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி
ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி.
குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி.
ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212 கோடி.
சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி.
பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி.
மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் -ரூ.1,447 கோடி, மற்றும் ரூ.1,109 கோடி என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் எனும் கிராமத்தில் வீட்டை விட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் கட்டாயம் குடை பிடித்துதான் வர வேண்டும். காரணம் இருவர் குடை பிடித்து அருகில் நின்றாலும் விரித்த குடையின் விட்டத்தின் அளவுக்கு இடைவெளி விட்டு தான் நிற்க முடியும். இது ஒரு மீட்டர் அளவு இடைவெளியாக அமையும். மேலும் விரித்த குடையுடன் ஒருவர் அருகில் இன்னொருவர் உரசிக்கொண்டு நிற்க வாய்ப்பே இல்லை. சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க இந்த உத்தரவை அந்த பஞ்சாயத்து பிறப்பித்துள்ளது
இதற்கு ஏதுவாக மலிவு விலையில் குடைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உலகமே கடைபிடிக்க ஏற்றதாக இருக்கிறது. குடைபிடிப்பதோடு முகக் கவசமும் அணிந்து சென்றால் கொரோனா சமூக பரவலை மேலும் தடுக்கலாம். கூடிய விரைவில் ஊரடங்கிலிருந்து அனைவரும் விடுபடலாம்.