பெய்ஜிங்
சீன படைவீரர்கள் எல்லோரும் போருக்கு தயாராக இருங்கள் என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இதற்கு நிறைய பின்னணிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். போருக்கு தயாராக இருங்கள்.. உங்கள் பயிற்சியை அதிகப்படுத்துங்கள். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். போருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும் என்று சீன அதிபர் ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.
சீன அதிபரின் இந்த உத்தரவுக்கு இந்தியா மீதான கோபமும் ஒரு காரணம் ஆகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது. அங்கு இரண்டு நாட்டு படைகளும் ராணுவத்தை குவித்து வருகிறது. அதோடு சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது.
இன்னொரு புறம், தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சிறு சிறு சண்டை நடந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் அங்கே போர் கப்பலை குவித்து வருகிறது. அங்கே சீனா அத்துமீறி போர் கப்பல்களை குவித்துள்ளதாக கூறி அமெரிக்கா இப்படி படைகளை குவித்து வருகிறது. மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா இப்படி செய்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து அந்த கடல் பகுதியில் சீனாவிற்கு எதிராக படைகளை குவித்து வருகிறது. அங்கு மூன்று நாட்டு கடற்படை குவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் தனது ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. இதனால் அங்கே அச்சம் அதிகரிக்க அதிகரிக்க, சண்டை நடக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஜிங்பிங் தனது பேச்சில், சீனாவை காக்க, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் கட்டமைக்க காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும், என்று கூறியுள்ளார் . அவர் உள்நாட்டில் நடக்கும் பிரச்னையை குறிப்பிட்டுதான் இப்படி பேசி உள்ளார். அதற்குதான் போருக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அதன்படி ஹாங்காங்கில் சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதன்படி ஹாங்காங்கில் கொண்டு வரப்படும் இந்த புதிய பாதுகாப்பு சட்டம் மூலம், அரசுக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை கைது செய்ய முடியும். அதிகாரம் மொத்தமாக பெய்ஜிங்கில் குவியும், அரசுக்கு எதிராக பேச முடியாது, வேறு நாட்டுடன் பெரிய தொடர்பை வைத்துக்கொள்ள முடியாது, ஹாங்காங் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படலாம். ஹாங்காங் சீனாவில் இருந்தாலும் தனி சட்டங்களுடன் சுயாட்சி கொண்ட பகுதியாக உள்ளது. ஆனால் சீனாவின் இந்த புதிய சட்டம் அதை இல்லாமல் செய்யும். இதனால் ஹாங்காங் மக்கள் அங்கு போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். இது பெரிய உள்நாட்டு போராக மாறும் என்கிறார்கள். இதில்தான் சீனா தனது ராணுவத்தை களமிறக்க முடிவு செய்துள்ளது என்றும் கணிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். இதனால் அங்கு போர் மூளும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அது பெரிய போராக இருக்கும்.
Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.
www.themewinter.comMake sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.